இங்கு வசிக்கும் கூலித் தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் வெறும் 8,000 மட்டுமே சம்பளமாக பெறக்கூடிய நிலையில், கொரோனா ஊரடங்கால் தங்கள் வாழ்வாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது. இச்சூழலில், இந்தளவு மின்கட்டணம் தங்கள் வருமானத்தில் பேரிடியாக விழுந்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர் இவர்கள். இந்த விவகாரத்தில் தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சேலத்தாம்பட்டி குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.