“வடிவேலுவின் நட்பை இழக்க தயாராக இல்லை” - நடிகர் மனோபாலா விளக்கம்

“வடிவேலுவின் நட்பை இழக்க தயாராக இல்லை” - நடிகர் மனோபாலா விளக்கம்
“வடிவேலுவின் நட்பை இழக்க தயாராக இல்லை” -  நடிகர் மனோபாலா விளக்கம்

நடிகர் வடிவேலு மாதிரியான மகா கலைஞனின் நட்பை இழக்க தான் தயாராக இல்லை என நடிகர் மனோபாலா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதிய தலைமுறைக்கு அவர் அளித்த பேட்டியில் “எனது யூடியூப் சேனலில் சிங்கமுத்து, வடிவேலு குறித்து பேசிய கருத்தை ஏற்கெனவே பல இடங்களில் அவர் பேசி உள்ளார். இணையதள சேனலில் வடிவேலுவுக்கு மன உளைச்சலை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது நோக்கம் இல்லை. நடிகர் வடிவேலு மாதிரியான மகா கலைஞனின் நட்பை இழக்க நான் தயாராக இல்லை.

இதனை வடிவேலு புரிந்து கொள்வார் என நினைக்கிறேன். அவர் கோபம் தனிய காத்திருக்கிறேன். என்னை வடிவேலு நிச்சயமாக புரிந்து கொள்வார் என நம்புகிறேன். நடிகர் சங்கம் வடிவேலு புகார் மீது நடவடிக்கைகள் எடுக்க முன் வந்தால் என் தரப்பு விளக்கத்தையும் அளிக்கத் தயாராக உள்ளேன்” எனத் தெரிவித்தார்.

முன்னதாக, நடிகர் வடிவேல் தென்னிந்திய திரைப்பட சங்கத்திற்கு அனுப்பிய கடிதத்தில், “நான் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 30 வருடங்களாக உறுப்பினராக உள்ளேன். மேலும், நடிகர் சங்கத்திற்காக என்னால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறேன். நடிகர் மனோபாலா நடத்தும் வேஸ்ட் பேப்பர் என்கிற யூடியூப் சேனலில் மனோபாலா என்னைப் பற்றி சில கேள்விகளை சிங்கமுத்துவிடம் கேட்க, அதற்கு அவர் என்னைப் பற்றி தரக்குறைவாகவும் தவறான செய்திகளையும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்தும் பதிலளித்துள்ளார்.

அந்த வீடியோவை பல பிரபல நடிகர்கள் உள்ள SIAA லைப் மெம்பர் ஷிப் என்கிற வாட்ஸ அப் குரூப்பிலும் பகிர்ந்துள்ளார். இதனால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். ஏற்கெனவே எனக்கும் சிங்கமுத்துவுக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் தொடர்ந்து கொண்டிருப்பதை இந்த இடத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகையினால் மனோபாலா மற்றும் சிங்கமுத்து மீது நடிகர் சங்க சட்ட விதி எண்: 13-ன் படி தகுந்த நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com