‘20 சவரன் நகையோடு லட்சக்கணக்கில் பணமும் போச்சு’- ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பெண் தற்கொலை

‘20 சவரன் நகையோடு லட்சக்கணக்கில் பணமும் போச்சு’- ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பெண் தற்கொலை
‘20 சவரன் நகையோடு லட்சக்கணக்கில் பணமும் போச்சு’- ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பெண் தற்கொலை

சென்னை மணலி புதுநகரில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மணலி புதுநகரை சேர்ந்தவர் பாக்யராஜ். இவர் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பவானி(29). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகளான நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர். சென்னை கந்தன்சாவடியில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவர் இன்று திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவலறிந்த மணலி புதுநகர் காவல் துறையினர் பவானியின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் மணலி புதுநகரில் இருந்து கந்தன்சாவடிக்கு ரயிலில் செல்லும்போது, ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்ததாகவும், பல இடங்களில் கடன் பெற்று ரம்மி விளையாடி வந்ததும் தெரியவந்துள்ளது.

இதுவரை 20 சவரன் நகைகளை விற்று ரம்மி விளையாடியதும், மேலும், தமது சகோதரிகள் இருவரிடம் தலா ஒன்றரை லட்சம் என 3 லட்சம் கடன் பெற்றும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்துள்ளதாகவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணமாகி 6 ஆண்டுகளான நிலையில் நடைபெற்ற தற்கொலை என்பதால் தண்டையார்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெறும் எனவும் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com