மழைநீர் வடிகால் கால்வாயில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

மழைநீர் வடிகால் கால்வாயில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு
மழைநீர் வடிகால் கால்வாயில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழப்பு

சென்னை அடுத்த அம்பத்தூர் தொழிற்பேட்டையில் மழைநீர் வடிகால் கால்வாயிலில் தவறி விழுந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று காலை முதல் பெய்த மழையால் சாலை எங்கும் தேங்கிய மழைநீரால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள். இந்தச் சூழலில் மழைநீர் வடிகால் கால்வாயிலில் தவறி விழுந்த நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே மன்னூர்பேட்டையை சேர்ந்தவர் ஷேக் அலி(46). அவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை சிடிஎச் சாலையில் நடந்து சென்றபோது அவ்வழியாக சென்ற மழை நீர் வடிகால்வாயில் தவறி விழுந்து நீரில் மூழ்கினார். இதனை அடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஷேக் அலியை மீட்க தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் அளித்தனர். 

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர் சுமார் 2 மணி நேரமாக நீரில் மூழ்கிய ஷேக் அலியை தேடினர்.இதனிடையே வடிகால்வாயில் ஷேக் அலி விழுந்த தகவல் கிடைத்து அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டனர். அம்பத்தூர் 7 வது மண்டலத்தில் தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றும் இரண்டு வாகனங்கள் கொண்டு வரப்பட்டது. அதில் ஒரு வாகனம் செயல்படாமல் பழுதானது.

எனவே தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை வாலியில் பிடித்து வெளியேற்றினர். நீண்ட போராட்டத்திற்கு பின்பு ஷேக் அலியின் உடலை கைப்பற்றினர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்ற அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com