ஜெயலலிதா மகன் எனக் கூறியவர் கைது

ஜெயலலிதா மகன் எனக் கூறியவர் கைது
ஜெயலலிதா மகன் எனக் கூறியவர் கைது

ஜெயலலிதா மகன் எனக் கூறி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில், ஜெ.கிருஷ்ணமூர்த்தி என்பவர் “தான்தான் ஜெயலலிதாவின் உண்மையான மகன். நடிகர் சோபன்பாபுவுக்கும், ஜெயலலிதாவுக்கும் பிறந்தவன். நான் பிறந்த சில நாட்களிலேயே என்னை தத்துக் கொடுத்துவிட்டனர். இதற்கு சாட்சிக் கையெழுத்திட்டது எம்.ஜி.ஆர். என்னை ஜெயலலிதாவின் வாரிசாக அறிவிக்க வேண்டும், ஜெயலலிதாவின் சொத்துக்களை என்னிடம் ஒப்படைக்க வேண்டும். எனக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என்று கூறி வழக்கு தொடர்ந்திருந்தார்.. இதுதொடர்பாக சில ஆவணங்களின் நகலையும் அவர் தாக்கல் செய்திருந்தார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு போலீசார் பதில் மனுதாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி போலீசார் பதில் மனுதாக்கல் செய்தனர். அதில், ஜெயலலிதாவின் மகன் என கிருஷ்ணமூர்த்தி போலி பத்திரம் தயார் செய்துள்ளார் எனவும், அவர் வசந்தாமணி என்பவரின் மகன் எனவும் தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்து விசாரிக்க குற்றபிரிவு போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்த போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com