அம்மன் கோயில் நகைகள் திருட்டு - வழிபட வந்தபோது துணிகரம்

அம்மன் கோயில் நகைகள் திருட்டு - வழிபட வந்தபோது துணிகரம்

அம்மன் கோயில் நகைகள் திருட்டு - வழிபட வந்தபோது துணிகரம்
Published on

நாமக்கல் மாவட்டத்தில் கோயிலில் வழிபட வந்த நபர், ஆள் நடமாட்டம் இல்லாததைப் பயன்படுத்தி அம்மன் நகைகளை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் - பெரியார் நகரில் பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் கருவறையில் இருந்த அம்மனுக்கு செலுத்தப்பட்டிருந்த நகைகள் திடீரென மாயமாகியிருந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கோயில் நிர்வாகிகள் அங்கு வைத்திருந்த சிசிடிவி கேமராக்களை சோதனை செய்தனர். அப்போது காலையில் கோயிலுக்கு வந்து அம்மனை வழிபடும் நபர் ஒருவர் அங்கு யாரும் இல்லாததைக் கண்டு கோயிலை சுற்றி நோட்டமிடுகிறார்.

சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அவர், கோயில் கருவறையில் நுழைந்து அம்மனின் நகைகளை திருடிச் செல்கிறார். இந்தக் காட்சிகள் அனைத்தும் கோயிலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தன.

இந்தக் காட்சிகளுடன் கோயில் நிர்வாகத்தினர் பள்ளிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவற்றைக் கொண்டு, வழக்குப்பதிவு செய்த போலீசார் அம்மனின் நகைகளைத் திருடிய நபரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com