கொலையில் முடிந்த நண்பர்களின் மதுபோதை வாக்குவாதம் - தப்பியோடியவர் கைது 

கொலையில் முடிந்த நண்பர்களின் மதுபோதை வாக்குவாதம் - தப்பியோடியவர் கைது 

கொலையில் முடிந்த நண்பர்களின் மதுபோதை வாக்குவாதம் - தப்பியோடியவர் கைது 
Published on

விருதுநகர் அருகே மர்மநபரால் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்துள்ளனர். 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வேல்முருகன் காலணியில் வசித்து வந்தவர் டீமாஸ்டர் ராஜபாண்டி. இவர் நேற்று அன்பு நகரில் தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது அவரை நகராட்சி தொடக்கபள்ளி முன்பு வழிமறித்த மர்மநபர் ராஜபாண்டியை கத்தியால் சராமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினார். இதில் கழுத்துப்பகுதியில் பலத்த காயமடைந்த ராஜபாண்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடியவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில், நெசவாளர் காலணியை சேர்ந்த ராஜபாண்டியின் நண்பர் மோகன கண்ணன் என்பவரிடம் விசாரணை நடத்த தேடிச்சென்ற போது அவர் வெளியூருக்கு தப்பி செல்ல முயன்றது தெரியவந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் மோகனகண்ணனை கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 

விசாரணையில் ராஜபாண்டியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இருவரும் சேர்ந்து மது அருந்தும் போது நடந்த வாக்குவாதத்தில் ராஜ பாண்டியை கொலை செய்ய திட்டமிட்டதாகவும் மோகன கண்ணன் வாக்குமூலம் அளித்தார். இதனை அடுத்து அருப்புக்கோட்டை நகர் போலீசார் மோகன கண்ணணை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அழைத்து சென்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com