திருமணமான பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு: இளைஞர் கொலை

திருமணமான பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு: இளைஞர் கொலை
திருமணமான பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு: இளைஞர் கொலை

திருமணமான பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்த இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

கடந்த 15-ம் தேதி பொங்கல் அன்று இரவு சுமார் 8 மணி அளவில் உத்திரமேரூர் கிழக்கு கமலா தெருவிலுள்ள ஒரு கடையின் அருகே நின்றுகொண்டிருந்த வாலிபர் ஒருவரை மர்ம கும்பல் ஒன்று கத்தியால் குத்தியுள்ளது. அந்த வாலிபர் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த வாலிபரின் சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

காவல்துறையினரின் விசாரணையில் கொலையான வாலிபர் உத்திரமேரூர் தண்டுக்காரத் தெருவை சேர்ந்த நாகப்பன் என்பவரின் மகன் மதன்(வயது 26) என்பதும், அவர் கார் ஓட்டுநர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் மதனுக்கும் அதேத்தெருவை சேர்ந்த பெருமாள் என்பவரது மகன் தசரதன் (வயது 30) என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததும் தெரியவந்தது. இதனால் காவல்துறையினர் தசரதன் உட்பட 5 நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

தசரதன் உத்திரமேரூர் அடுத்துள்ள ஒரு தனியார் தொழிநுட்ப கல்லூரியில் படிக்கும்போது, அவருடன் படித்த மதுராந்தகத்தை சேர்ந்த அஸ்வினி என்ற பெண்ணை காதலித்துள்ளார். அதன்படி இருவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்த நிலையில் தற்போது வரை அவர்களுக்குள் குழந்தை இல்லை.

இந்தநிலையில் தசரதனின் உறவுக்காரரான மதன் அடிக்கடி தசரதன் வீட்டிற்கு சென்றுவந்ததாக கூறப்படுகிறது. இதனால் மதனுக்கும் தசரதனின் மனைவி அஸ்வினிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் தசரதனுக்கு தெரியவர இருவரையும் கண்டித்துள்ளார். இதனால் தசரதனுக்கும் அவரது மனைவி அஸ்வினிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இதனிடையே அஸ்வினியும், மதனும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாயமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்நிலையத்தில் தசரதன் மற்றும் அவரது பெற்றோர் புகார் அளித்துள்ளனர், காவல்துறையினர் இருவரையும் தேடிவந்தநிலையில் அஸ்வினி மேல்மருவத்தூரிலுள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஆஜராகி தனது கணவர் அடிக்கடி அடித்து துன்புறுத்துவதாகவும், அதனால் அவருடன் சேர்ந்துவாழ விருப்பமில்லை என்று கூறிவிட்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நேரத்தில் பொங்கலை கொண்டாட மதன் உத்திரமேரூர் சென்றுள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்ட தசரதன் தனது நண்பர்கள் 4 பேர் உடன் சென்று மதனை வெட்டிக் கொலை செய்ததாக காவல்துறையினரின் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com