சென்னை: பைக்கில் சென்றவரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்..!

சென்னை: பைக்கில் சென்றவரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்..!
சென்னை: பைக்கில் சென்றவரின் கழுத்தை அறுத்த மாஞ்சா நூல்..!

சென்னை மதுரவாயலில் காத்தாடியின் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலம், அண்ணா நகரை சேர்ந்தவர் பரசுராமன்(56). இவர் நேற்று அம்பத்தூரில் உள்ள மருத்துவமனையில் தனக்கு டயாலிசிஸ் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில், மதுரவாயல் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென அங்கு சிக்கிக் கொண்டிருந்த காத்தாடி மாஞ்சா நூல் அவரது கழுத்தை பலமாக அறுத்தது.

இதில் கழுத்து அறுபட்டு நிலைகுலைந்து போன பரசுராமன் தடுமாறி கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து அந்த வழியே வந்த சிலர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்றவரை அவரது உறவினர்கள் பின்னர் அங்கிருந்து ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவால் வாலிபர்கள் வெளியே செல்ல முடியாமல் மீண்டும் மாஞ்சா நூலில் காத்தாடி விட்டு வருவதால் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருவதாக புகார் எழுந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com