பழிக்குப் பழியா? - பெயிண்டரை துரத்தி துரத்தி வெட்டிய கும்பல்!

பழிக்குப் பழியா? - பெயிண்டரை துரத்தி துரத்தி வெட்டிய கும்பல்!
பழிக்குப் பழியா? - பெயிண்டரை துரத்தி துரத்தி வெட்டிய கும்பல்!

வெட்டுக்காயத்துடன் தப்பித்து ஓடிய பெயிண்டரை துரத்தி துரத்தி மர்ம கும்பல் வெட்டிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சென்னை சிந்தாதிரிப்பேட்டை படவேட்டம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தமிழரசன் (35). இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார்.  நேற்றிரவு வீட்டில் இருந்துள்ளார் தமிழரசன். அப்போது அடையாளம் தெரியாத சிலர் பட்டாக்கத்தியுடன் தமிழரசன் வீட்டிற்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டினர்.

 தப்பி ஓடி வெளியே வந்த தமிழரசனை தடுத்து நிறுத்தி மீண்டும் சாலையின் நடுவே வைத்து வெட்டினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதை கண்ட அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்து தப்பி விட்டனர். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தமிழரசனை மீட்டு சிகி்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சிந்தாதிரிப்பேட்டை போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

போலீஸ் விசாரணையில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பாக இதே பகுதியில் வசித்து வந்த சசி என்பவர் கொலை செய்யப்பட்டார். 

இந்த வழக்கில் தமிழரசன் சிறைதண்டனை பெற்று விட்டு தற்போது வெளியே வந்துள்ளார். இதற்கு பழி வாங்கவே சசியின் கூட்டாளிகள் தமிழரசனை வெட்டியதாக கூறப்படுகிறது. ஆனாலும் காவல்துறையினர் வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com