கடனை திருப்பித் தராதவர் அடைத்து வைத்து சித்ரவதை - போலீசில் புகார்

கடனை திருப்பித் தராதவர் அடைத்து வைத்து சித்ரவதை - போலீசில் புகார்
கடனை திருப்பித் தராதவர் அடைத்து வைத்து சித்ரவதை - போலீசில் புகார்

ரூ.15 லட்சம் கடனை திருப்பித் தராத நபரை கடத்தி சித்ரவதை செய்ததாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் அந்தோணிசாமி (50). இவர் சென்னை திருமங்கலம் பாடி குப்பத்தில் தங்கி தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருடைய ஊரை சேர்ந்த சகாயம் என்பவரிடம் கடனாக ரூ.15 லட்சத்தை அந்தோணி வாங்கியுள்ளார். இதனையடுத்து சகாயம் பல முறை அந்தோணியிடம் பணத்தை திரும்ப கேட்டும் அவர் கொடுக்கவில்லை எனத் தெரிகிறது. கடனை திரும்ப கட்ட முடியாததால் அந்தோணியுடன் சகாயம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் சகாயம் மற்றும் அவரது நண்பர்கள் சிலர், காரில் அந்தோணியை கடந்த 14-ம் தேதி அன்று கடத்தி மேடவாக்கத்தில் உள்ள வீட்டில் மூன்று நாட்களாக வைத்து அடித்து துன்புறுத்தி உள்ளதாக தெரிகிறது. பயந்து போன அந்தோணி, தனக்கு சொந்தமான இடத்தை விற்று தருகிறேன் என்று கூறியதாக தெரிகிறது. ஆனாலும் அதன்பின்பும், அந்தோணியை பரமக்குடிக்கு கடத்திச் சென்ற சகாயம் மற்றும் அவரது நண்பர்கள் அங்கு ஒரு தனி அறையில் அடைத்து வைத்து அந்தோணியை சித்ரவதை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அங்கிருந்து தப்பி ஓடிவந்த அந்தோணி சென்னைக்கு வந்து திருமங்கலம் காவல் நிலையத்தில் கடத்தல் புகார் கொடுத்துள்ளார். புகார் குறித்து திருமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com