அழகி பட்டம் வென்ற கோவை பெண்... அவதூறு பரப்பியவர் கைது

அழகி பட்டம் வென்ற கோவை பெண்... அவதூறு பரப்பியவர் கைது
அழகி பட்டம் வென்ற கோவை பெண்... அவதூறு பரப்பியவர் கைது

அழகி பட்டம் வென்ற பெண் குறித்து இணையத்தில் அவதூறு பரப்பிய திமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

கோவையை சேர்ந்தவர் சோனாலி பிரதீப். இவர் திருமணமானவர்களுக்கான அழகி போட்டியில் மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டம் வென்றவர். இதனைத்தொடர்ந்து சோனாலி பிரதீப் அதிமுகவில் இணைந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார்

இதனிடையே சோனாலி பிரதீப், சாய்பாபா காலணி காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், சமூக வலைத்தளங்களில் சிலர் தன்னை ஆபாசமாக சித்தரித்து வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  இந்நிலையில் சோனாலி புகாரின் பேரில் அவதூறு பரப்பியதாக ஈரோடு மாவட்டம் 20 வது வார்டு திமுக உறுப்பினர் ரகுபதி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com