குடிபோதையில் வனத்துறை ஊழியரை கத்தியால் குத்தியவர் கைது

குடிபோதையில் வனத்துறை ஊழியரை கத்தியால் குத்தியவர் கைது

குடிபோதையில் வனத்துறை ஊழியரை கத்தியால் குத்தியவர் கைது
Published on

குடிபோதையில் வனத்துறை ஊழியரை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.

கோவை, ஆலாந்துறை அடுத்த இருட்டுப்பள்ளத்தை சேர்ந்தவர் நடராஜ் ( வயது 55). இவர், போளுவாம்பட்டி வனச்சரகத்தில் வனக்காப்பாளராக பணியாற்றி வருகிறார். சாடிவயல் வனத்துறை செக்போஸ்ட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அங்கு, மாலை, 5:30 மணியளவில் கல்கொத்திபதி மலை கிராமத்தை சேர்ந்த நந்தகுமார் ( 22) என்பவர் குடிபோதையில் வந்துள்ளார்.

கோவை குற்றால வனப்பகுதிக்குள் செல்ல முற்பட்ட அவரை, தடுத்த காரணத்தால் வனத்துறை ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, நடராஜை கத்தியால் குத்தியுள்ளார் நந்தகுமார் . அதில் பலத்த காயமடைந்த நடராஜ், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். காருண்யா நகர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நந்தகுமாரை கைது செய்துள்ளனர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com