கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதிக்கு மமதா அஞ்சலி

கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதிக்கு மமதா அஞ்சலி
கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதிக்கு மமதா அஞ்சலி

திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு கோபாலபுர இல்லத்தில் மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி இரங்கல் தெரிவித்தார்.

திமுகவின் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கருணாநிதி உடல்நிலைக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உடல்நிலை, நேற்று பின்னடைவை சந்தித்தது. இன்று மாலை மிகவும் கவலைக்கிடமானது. மாலை 6.10 மணியளவில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இதுதவிர பல மாநில முதலமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, மதிமுக செயலாளர் வைகோ, கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சென்னை வந்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, கோபாலபுர இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் உடலிற்கு அஞ்சலி செலுத்தினார். அத்துடன் அவரது குடும்பத்தினருக்கும் அவரது ஆறுதல் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com