மாமல்லபுரம்: பட்டாசு வெடித்து உற்சாகமாக தீபாவளியை கொண்டாடிய பிரான்ஸ் நாட்டு தோழிகள்!

மாமல்லபுரம்: பட்டாசு வெடித்து உற்சாகமாக தீபாவளியை கொண்டாடிய பிரான்ஸ் நாட்டு தோழிகள்!
மாமல்லபுரம்: பட்டாசு வெடித்து உற்சாகமாக தீபாவளியை கொண்டாடிய பிரான்ஸ் நாட்டு தோழிகள்!

மாமல்லபுரத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் பட்டாசு வெடித்து பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப்பயணிகள் தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்திற்கு பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள கல்லூரியில் போராசிரியையாக வேலை செய்துவரும் தோழிகளான கரோலின் (52), மெலன் (45), இசபெல் (53), மோர்கன் (51), தெறிஸ்கா (54) ஆகிய 5 பெண்கள் சுற்றுலா வந்துள்ளனர்.

இந்நிலையில், அங்குள்ள புராதன சின்னங்களை சுற்றிப் பார்த்துவிட்டு, மாமல்லபுரம் பஸ் நிலையம் அருயேயுள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளனர். இதையடுத்து இன்று மாமல்லபுரம் தெருக்களில் தீபாவளியை கொண்டாடும் வகையில் சிறுவர்கள் பலர் பட்டாசு வெடித்துக்கொண்டிருந்தனர். இதைப் பார்த்து ரசித்த பிரான்ஸ் நாட்டு பெண்கள் 5 பேரும் தாங்களும் தீபாவளியை கொண்டாடும் ஆவலில் கடைக்குச் சென்று பட்டாசுகளை வாங்கி வந்தனர்.

இதைத் தொடர்ந்து அவர்கள், தாங்கள் தங்கியிருக்கும் ஹோட்டலின் முகப்பு வாயிலில் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி மகிழ்ந்தனர். அப்போது அவர்கள் 'ஹேப்பி தீபாவளி' என கோஷமிட்டு மகிழ்ந்ததைக் காணமுடிந்தது. பிறகு அந்த ஹோட்டல் நிர்வாகத்திடம் தீபாவளிக்கு செய்த அதிரசம், முறுக்கு, இட்லி உள்ளிட்ட தின்பண்டங்களை கேட்டு வாங்கி சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com