மேகதாது விவகாரம்: தமிழக, கர்நாடகா முதலமைச்சர்களுக்கு நிதின் கட்கரி கடிதம்

மேகதாது விவகாரம்: தமிழக, கர்நாடகா முதலமைச்சர்களுக்கு நிதின் கட்கரி கடிதம்

மேகதாது விவகாரம்: தமிழக, கர்நாடகா முதலமைச்சர்களுக்கு நிதின் கட்கரி கடிதம்
Published on

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தமிழகம் மற்றும் கர்நாடகா மாநில முதலமைச்சர்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் எழுதியுள்ளார்.

காவிரி ஆற்றில் புதிதாக மேகதாது அணையை 5 ஆயிரத்து 912 கோடி ரூபாய் செலவில் கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழக எல்லைப் பகுதியில் அமைக்க திட்டமிட்டுள்ள அணை மூலம் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றவும், 400 மெகாவாட் மின்உற்பத்தி நிலையத்தை ஏற்படுத்தவும் கர்நாடகா முடிவெடுத்துள்ளது. ஏற்கெனவே, காவிரியில் உரிய நீரை வழங்க மறுப்பதாக கர்நாடகாவுடன் தமிழகத்துக்கு பிரச்னை உள்ள நிலையில், புதிய அணைக் கட்ட தமிழகம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மேகதாதுவில் அணைக் கட்ட சாத்தியக்கூறு உள்ளிட்ட பல தகவல்களுடன் கூடிய வரைவு அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திற்கு கர்நாடக அரசு அனுப்பியது. இந்த அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக மக்களிடையே அச்சம் ஏற்பட்டது. இதனிடையே தமிழக அரசின் அனுமதி இல்லாமல் மேகதாது அணைக் கட்ட கர்நாடக அரசால் முடியாது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருந்தார். மத்திய அமைச்சரின் இந்தப் பேச்சு தமிழக விவசாயிகள் மத்தியில் ஓரளவிற்கு நிம்மதியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தமிழகம் மற்றும் கர்நாடகா மாநில முதலமைச்சர்களுக்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கடிதம் எழுதியுள்ளார்.  இதுதொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில், “உங்களுக்கு ஏதுவான சமயத்தில் மேகதாது விவகாரம் பற்றி நாம் டெல்லியில் சந்தித்து விவாதிக்கலாம்” எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com