தீவிர புயலாக மாறியது ‘மஹா’

தீவிர புயலாக மாறியது ‘மஹா’

தீவிர புயலாக மாறியது ‘மஹா’
Published on

அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த மஹா புயல் தீவிர புயலாக மாறியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

காற்றின் வேகம் 120 கி.மீட்டர் வரை இருக்கும் எனவும் நான்காம் தேதி வரை மீனவர்கள் அரபிக்கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஏற்கெனவே அரபிக்கடலில் கியார் புயல் உருவாகியுள்ள நிலையில் நேற்று இரண்டாவதாக ‘மஹா’ புயல் உருவானது. திருவனந்தபுரத்தில் இருந்து 320 கி.மீட்டர் தூரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் மஹா புயல் மையம் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com