மதுரை: 3 மாதத்திற்கு முன்பு காணாமல்போன இளைஞர்; தூக்கிட்ட நிலையில் எலும்புக்கூடாக மீட்பு

மதுரை: 3 மாதத்திற்கு முன்பு காணாமல்போன இளைஞர்; தூக்கிட்ட நிலையில் எலும்புக்கூடாக மீட்பு
மதுரை: 3 மாதத்திற்கு முன்பு காணாமல்போன இளைஞர்; தூக்கிட்ட நிலையில் எலும்புக்கூடாக மீட்பு

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே, பயன்பாடு இல்லாத தோட்டத்தில் மூன்று மாதத்திற்கு முன்பு காணாமல்போன இளைஞரின் உடல் எலும்புக்கூடாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமங்கலம் அருகே கட்ராம்பட்டி விலக்கு பகுதியில் உள்ள பயன்பாடற்ற தோட்டத்தில் மனித எலும்புக்கூடுகள் கிடப்பதாக திருமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த திருமங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் திருமங்கலம் பாண்டியன் நகரைச் சேர்ந்த வேலுச்சாமி மகன் யோகராஜன் (33) என்பது தெரியவந்தது. மேலும் அவருக்கு பொன்மீனா என்ற மனைவியும் 4 வயதில் ஒரு மகளும் 10 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

எண்ணெய் வியாபாரம் செய்து வந்த யோகராஜன் கடந்த 19.04.2021 அன்று வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. மேலும் காணாமல் போன ஒரு மாதத்திற்கு பின் கட்ராம்பட்டி பகுதியில் இவருடைய இருசக்கர வாகனம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், மூன்று மாதங்களுக்கு பிறகு தற்போது திருமங்கலம் அருகே பயன்பாடற்ற தோட்டத்தில் யோகராஜன் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவர் காணாமல்போன அன்று கட்டம் போட்ட கைலியும் டி-ஷர்ட்டும் அணிந்து இருந்தார். மேலும் இவருடைய மனைவி நேரில் வந்து அடையாளம் காட்டிய பின்பு இறந்தது யோகராஜன் என்பது உறுதி செய்யப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com