மதுரை: முதல் சிறப்பு ரயில் தொடக்கம் - பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பயணிகள் அனுமதி

மதுரை: முதல் சிறப்பு ரயில் தொடக்கம் - பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பயணிகள் அனுமதி
மதுரை: முதல் சிறப்பு ரயில் தொடக்கம் - பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பயணிகள் அனுமதி

மதுரையில் பயணிக்களுக்கான முதல் சிறப்பு ரயில் சேவை தொடங்கி உள்ளது

மதுரையில் பயணிகளுக்கான முதல் சிறப்பு ரயில் சேவை தொடங்கி உள்ளது. அதன்படி மதுரை டூ விழுப்புரம் சிறப்பு ரயில், 7 மணிக்கு மதுரையில் புறப்பட்டு, நண்பகல் 12 மணிக்கு விழுப்புரத்தை சென்று சேர உள்ளது. சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பே தொடங்கியது. 

தற்போது இந்த ரயிலில், பயணிகள் பயணம் செய்வதற்கு முன் அவர்களிடம் இ பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். மதுரை ரயில் நிலையம் முன் சிறப்பு ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் சானிடைசரை கொண்டு சுத்தம்செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com