மதுரை: இணைபிரியாத அணிலிடம் பாசம் கொட்டி பராமரிக்கும் இளைஞர்!

மதுரை: இணைபிரியாத அணிலிடம் பாசம் கொட்டி பராமரிக்கும் இளைஞர்!
மதுரை: இணைபிரியாத அணிலிடம் பாசம் கொட்டி பராமரிக்கும் இளைஞர்!

மதுரையில் இளைஞரை விட்டு இணைபிரியாத அணில். பணியிலும் தோளில் சுமந்து கொண்டு இளைஞர் அணிலிடம் அன்பை வெளிப்படுத்துகிறார்.

மதுரை நேரு நகரைச் சேர்ந்த வினோத் என்ற இளைஞர் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணியாற்றி வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு மெக்கானிக் நிறுவனத்திற்குள் புகுந்த ஒரு அணில் அங்கிருந்து வெளியேறாமல் சுற்றிச் சுற்றி வந்துள்ளது.

இந்நிலையில், அதற்கு தானியங்கள் கொடுத்து அன்பை வெளிப்படுத்தத் துவங்கிய இளைஞர் வினோத்திடம் நெருக்கம் காட்டிய அணில் பின்னர் அவருடனே இருக்கத் துவங்கியது. வீட்டில் வினோத்துடன் இருக்கும் அணில், அவர் வேலைக்குச் செல்லும்போதும் அவரது தோளிலும் சட்டை பாக்கெட்டிலும் அமர்ந்து இளைஞர் வினோத்தை பிரியாமல் இருந்து வருகிறது.

இதையடுத்து அணிலின் அன்பை புரிந்து கொண்ட இளைஞர் அணிலிற்கு உணவு தண்ணீருடன் அன்பையும் செலுத்தி வளர்த்து வருகிறார். இளைஞர் அணிலிடையே உள்ள அன்பு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com