தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு மதுரை எம்பி. சு.வெங்கடேசன் வேண்டுகோள் - காரணம் என்ன?

தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு மதுரை எம்பி. சு.வெங்கடேசன் வேண்டுகோள் - காரணம் என்ன?
தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு மதுரை எம்பி. சு.வெங்கடேசன் வேண்டுகோள் - காரணம் என்ன?

தெற்கு ரயில்வே வேலை வாய்ப்புகளை பெங்களூரு ஆர்ஆர்பி தேர்வர்களை கொண்டு நிரப்பக்கூடாது என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தென்னக ரயில்வே வேலை வாய்ப்புகளில், தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக தெற்கு ரயில்வேயில் சரக்கு வண்டி பாதுகாவலர், லோகோ பைலட், உள்ளிட்ட காலிப் பணியிடங்களில் அதிகளவு வட மாநிலத்தவர்கள் பணியமர்த்தப்படுவது சர்ச்சையாகும் நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இந்திய அளவில், தமிழ்நாடும் கேரளாவும் கல்வியில் முதன்மையான மாநிலங்களாக இருந்து வரும் நிலையில், ரயில்வே தேர்வு உள்ளிட்ட மத்திய அரசுப் பணிகளுக்கான தேர்வுகளில் மட்டும் தமிழர்களின் தேர்ச்சி விகிதம் மிகமிக குறைவாகவே இருந்து வருகிறது.

குறிப்பாக சென்னை ஆர்ஆர்பி தேர்வு செய்து காத்திருப்போர் பட்டியலில் இருந்த லோகோ பைலட் தேர்வர்களை விட்டு விட்டு கோரக்பூர் தேர்வர்கள் 55 பேரை நியமிக்க எடுத்த முடிவு பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் கைவிடப்பட்டது.

இந்த நிலையில் மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

அதில் தெற்கு ரயில்வேயில் உள்ள லோகோ பைலட் வருங்கால காலியிடங்களை பெங்களூரு ஆர்.ஆர்.பி தேர்வர்களைக் கொண்டு நிரப்பிட நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது. இது தெற்கு ரயில்வேயில் வேலை தேடும் இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிப்பதாகும்.

எனவே, இம்முடிவை உடனடியாக கைவிட வேண்டுவதாக மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு டிவிட்டர் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com