திருக்கல்யாண வைபவம்
திருக்கல்யாண வைபவம்pt desk

மதுரை | மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Published on

செய்தியாளர்: செ.சுபாஷ்

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா:

உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். அதிலும் சித்திரை மாதம் நடைபெறும் திருவிழா பிரசித்தி பெற்ற திருவிழாவாக பாhக்க்ப்படுகிறது. இந்தாண்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து ஒவ்வொரு நாளும் அம்மனும் சுவாமியும் வௌ;வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

TK

மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும், திக் விஜயமும்:

இதைத் தொடர்ந்து மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்ற நிலையில், நேற்றிரவு திக் விஜயம் நடைபெற்றது. இந்நிலையில் சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு; நான்கு சித்திரை வீதிகளை வலம் வந்தனர் . அப்போது திருக்கல்யாண மேடையில் ஓதுவார்களால் பன்னிரு திருமுறைகள் ஓதப்பட்டது. இதையடுத்து முத்துராமய்யர் மண்டபத்தில் சுவாமியும், அம்மனும் கன்னி ஊஞ்சலாடிய பின் கோயில் வடக்கு ஆடி, மேல ஆடி சந்திப்பில் நறுமணம் மிக்க வெட்டி வேர்கள் மற்றும் பல வகை வண்ணப்பூக்களாலும், நவதானியங்களாலும் அலங்கரிப்பட்ட திருக்கல்யாண மேடையில் மணக்கோலத்தில் மீனாட்சியம்மனும், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும் தனி தனியாக எழுந்தருளினர்.

திருக்கல்யாண வைபவம்
தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக பிரதமர் மோடி சாட்டையை சுழற்றியுள்ளார் - செல்லூர் ராஜூ

திருக்கல்யாண நிகழ்வுகள்:

இதைத் தொடர்ந்து விநாயகர் வழிபாடு உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பாலிகை இடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையடுத்து சுவாமி மற்றும் அம்மனின் சார்பில் பிரதிநிதிகளான சிவாச்சாரியார்களுக்கு ரக்சாபந்தன் எனப்படும் காப்புகட்டிய பின்னர் மீனாட்சியம்மனுக்கும், சுந்தரேசுவரருக்கும் காப்புகட்டும் வைபவமும் அதனை தொடர்ந்து பல்வேறு பூஜைகளும் நடைபெற்றது. தொடர்ச்சியாக மீனாட்சியம்மனுக்கும், சுந்தரேஸ்வரருக்கும் மணப்பட்டு சாற்றும் நிகழ்வு நடைபெற்றதையடுத்து கோயில் சார்பில் சுந்தரேஸ்வரருக்கு பட்டு பீதாம்பரமும், அம்மனுக்கு பட்டு சேலைகளும் சாத்தப்பட்டது. இதனையடுத்து தனது தங்கையான மீனாட்சியம்மனை பவளகனிவாய் பெருமாள் தாரைவார்த்து கொடுக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

TK

வெகு விமர்சையாக நடைபெற்ற திருக்கல்யாண வைபவம்:

தொடர்ந்து மீனாட்சியம்மன் சார்பிலும், சுந்தரேசுவரர் சார்பிலும் பிரதிநிதிகளாக இருந்து சிவாச்சாரியார்கள் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது இதையடுத்து மந்;திரங்கள் முழங்க, மங்கல வாத்தியங்கள் இசைக்க வெகுவிமர்சையாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் மிதுன லக்கனத்தில் மீனாட்சியம்மனுக்கு வைரத்தால் ஆன மங்கல நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக கோலகலமாக நடைபெற்றது. அப்போது கோவிலில் கூடியுள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றவுடன் பெண்கள் தங்களது மாங்கல்யத்தை புதுப்பித்துக் கொண்டனர்.

திருக்கல்யாண வைபவம்
புதுக்கோட்டை | கறம்பக்குடி கருப்பர் கோயில் திருவிழா - பக்தர்களுக்கு பிரியாணி வழங்கிய இஸ்லாமியர்கள்

சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை:

மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்வை தொடர்ந்து சுவாமிக்கும், அம்மனுக்கும் பல்வேறு தீப ஆராதனைகள் காட்டப்பட்டது. திருக்கல்யாணத்தின் போது மட்டுமே அம்மன் உற்சவத்திற்கு தங்க அங்கி அணிவிக்கப்படும். அப்போது 1823 ஆம் ஆண்டு முன்னோர்களால் மீனாட்சியம்மன் கோயிலுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட தீபாரதனை தட்டு மூலமாக அம்மனுக்கும் சுவாமிக்கும் தீபாரதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து தங்கத்தால் ஆன 300 ஆண்டுகள் பழமைவாய்ந்த சந்தன கும்பா மற்றும் பன்னீர் தெளிப்பு கும்பா மூலமாக சுவாமிக்கும் அம்மனுக்கும் பன்னீர் தெளிக்கப்பட்டது.

1 லட்சம் பக்தர்களுக்கு திருமண விருந்து:

திருக்கல்யாண விழாவை முன்னிட்டு மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 3 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். திருக்கல்யாண நிகழ்வில் கோவில் அறங்காவல்குழு தலைவர் ருக்மணி பழனிவேல்ராசன் மற்றும் அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், மாவட்ட ஆட்சியர் சங்கீதா, மாநகராட்சி ஆணையர் சித்ராவிஜயன், நீதிபதிகள் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இதையடுத்து 1 லட்சம் பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்தும் நடைபெற்றது. இந்த திருக்கல்யாண விருந்தின்போது சாப்பிட்ட கையோடு பக்தர்கள் திருக்கோயில் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மொய்ப்பந்தலில், திருக்கல்யாண மொய் எழுதி, பிரசாதம் பெற்றுக் கொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com