சூர்யா,ஜோதிகா,சிவக்குமார் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.!

சூர்யா,ஜோதிகா,சிவக்குமார் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.!
சூர்யா,ஜோதிகா,சிவக்குமார் மீது  காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்.!

நீதிபதிகளை அவதூறாக பேசியதாக நடிகர்கள் சூர்யா, சிவக்குமார் மற்றும் ஜோதிகா மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரையில் வழக்கறிஞர்கள், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். 

நீட் தேர்வால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக நடிகர் சூர்யா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் நீதிமன்றம் நீட் தேர்வுக்கு அனுமதியளித்தது தொடர்பாக அவர் குறிப்பிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் மதுரை சேர்ந்த வழக்கறிஞர்கள்  நடிகர் சூர்யா ஜோதிகா மற்றும் சிவக்குமார் மீது மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். மனுவில் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com