ராகுலுடன் சென்ற காங். தலைவர்களுக்கு அனுமதி மறுப்பு - மதுரை விமான நிலையத்தில் சலசலப்பு

ராகுலுடன் சென்ற காங். தலைவர்களுக்கு அனுமதி மறுப்பு - மதுரை விமான நிலையத்தில் சலசலப்பு
ராகுலுடன் சென்ற காங். தலைவர்களுக்கு அனுமதி மறுப்பு - மதுரை விமான நிலையத்தில் சலசலப்பு

மதுரை விமான நிலையத்திற்கு ராகுல் காந்தி செல்லும் போது அவருடன் தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியையும், மாவட்டத் தலைவர் கார்த்திகேயனையும் விமான நிலையத்திற்குள் நுழைய மத்திய பாதுகாப்பு படையினர் அனுமதிக்க மறுத்ததால் தள்ளு முள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது.

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட்ட பிறகு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மதுரை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டார். அப்போது ராகுல் காந்தி விமான நிலையத்திற்கு செல்லும் போது அவருடன் தமிழக காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியையும், மாவட்டத் தலைவர் கார்த்திகேயனையும் விமான நிலையத்திற்குள் நுழைய மத்திய பாதுகாப்பு படையினர் அனுமதிக்க மறுத்ததால் சிறிது நேரம் தள்ளு முள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் விமான நிலையத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் காவல்துறையினருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்ததால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com