மானாமதுரை அருகே கல்லூரி மாணவர் தற்கொலை - போலீசார் விசாரணை

மானாமதுரை அருகே கல்லூரி மாணவர் தற்கொலை - போலீசார் விசாரணை

மானாமதுரை அருகே கல்லூரி மாணவர் தற்கொலை - போலீசார் விசாரணை
Published on

மானாமதுரை அருகே கல்லூரி மாணவர் ஒருவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மழவராயனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கார்மேகம். இவரது மகன் செல்வா என்பவர் மதுரையில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரியில் பி.எஸ்.சி ஐடி., முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய செல்வா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து வீட்டிற்கு வந்த செல்வாவின் பெற்றோர் அவர் மயங்கிய நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சியுற்று மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

இதையடுத்து தகவலறிந்து வந்த போலீசார் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவர் செல்வாவிற்கு
கல்லூரியில் ஏதேனும் பிரச்சனையா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை செய்து
வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com