ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் - விராட் கோலி, தமன்னாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் - விராட் கோலி, தமன்னாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்
ஆன்லைன் சூதாட்ட விளம்பரம் - விராட் கோலி, தமன்னாவுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்

ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்த விராட் கோலி, தமன்னாவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மதுரையைச் சேர்ந்த முகமது ரஸ்வி தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய வேண்டும் என வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு," விளம்பரம் செய்யும் பிரபலமானவர்களில் பலர் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் அவரவர் பாக்கெட்டுகளை நிரப்புவதில் கவனம் செலுத்துகின்றனர். பொதுமக்களில் பலர் அவர்களை பின்பற்றுவார்கள் என அறிந்தும் இவ்வாறு செயல்படுவது ஏன்? என கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து இந்த வழக்கில், மத்திய, மாநில அரசுகள், கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, கங்குலி, நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சுதீப், ரானா, நடிகை தமன்னா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை நவம்பர் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com