நாளை நடைபெறும் அஞ்சல்துறை தேர்வுகளுக்கு தடையில்லை; ஆனால் தேர்வு முடிவுகளை வெளியிடக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அஞ்சல்துறை தேர்வை ஆங்கிலம், இந்தியில் மட்டும் எழுத வேண்டும் என்பதற்கு எதிராக மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த ஆசீர்வாதம் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் ரவிச்சந்திரபாபு, மகாதேவன் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அஞ்சல்துறை தேர்வில் தமிழ்மொழி தவிர்க்கப்பட்டது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்து நீதிமன்றம்.