மதுரை: செம்மறி ஆட்டுக் குட்டிகளை ஈன்ற வெள்ளாடு - ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்லும் மக்கள்

மதுரை: செம்மறி ஆட்டுக் குட்டிகளை ஈன்ற வெள்ளாடு - ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்லும் மக்கள்
மதுரை: செம்மறி ஆட்டுக் குட்டிகளை ஈன்ற வெள்ளாடு - ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்லும் மக்கள்

உசிலம்பட்டி அருகே வெள்ளாடு ஒன்று செம்மறி ஆட்டுக்குட்டிகளை ஈன்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நாட்டாமங்கலம் - அய்யம்பட்டியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர், தனது வீட்டில் பால்பண்ணை வைத்து ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சோழவந்தானிலிருந்து கர்ப்பமாக இருந்த வெள்ளாடு ஒன்றை வாங்கி வந்தார். இந்த வெள்ளாடு இரு தினங்களுக்கு முன்பு மூன்று குட்டிகளை ஈன்றுள்ளது.

இதில், அதிசயமாக இரு செம்மறி ஆட்டுக் குட்டிகளும், ஒரு வெள்ளாட்டு குட்டியையும் ஈன்ற சம்பவம் அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. வெள்ளாடு, செம்மறி ஆட்டுக் குட்டிகளை ஈன்றதை அறிந்த கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்வதாக மகேந்திரன் தெரிவித்தார்.

இது குறித்து கால்நடை மருத்துவர்களிடம் கேட்டபோது இனப்பெருக்கத்தின் போது இதுபோன்று நடைபெறும் என்றும் அதிலும் எப்போதாவது மட்டுமே இது போன்ற சம்பவங்கள் நடைபெறும் எனவும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com