கொரியர் கொள்ளையர்கள் கைது : சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கொரியர் கொள்ளையர்கள் கைது : சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கொரியர் கொள்ளையர்கள் கைது : சிசிடிவி காட்சிகள் வெளியீடு
Published on

மதுரையில் கொரியர் பார்சல் கொடுப்பது போன்று நடித்து‌, நகை மற்றும் பணத்தை‌ கொள்ளையடித்துவிட்டு, தப்பிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

மதுரை மேலஅனுப்பானடியை அடுத்த சின்னகண்மாய் பகுதியில் வசிக்கும் மாட்டுதீவண தொழில் அதிபர் வெற்றிவேல். இவரது வீட்டிற்கு கொரியர் கொடுப்பதுபோல நேற்று மதியம் ஹெல்மெட் அணிந்து வந்த இரண்டு மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் வெற்றிவேலையும், அவரது மனைவி கிரஹ லட்சுமி மற்றும் மருமகள் சவிதா ஆகியோர் மீது மிளகாய் பொடி தூவி கட்டிப்போட்டனர். பின்னர் அவர்கள் அணிந்திருந்த 46 சவரன் தங்க நகைகள் மற்றும் 32 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளையடித்து சென்றனர். 

இது தொடர்பாக 4 தனிப்படை அமைக்கப்பட்டு, கொள்ளையில் ஈடுபட்டவர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையின் போது ஆய்வு செய்யப்பட்ட சிசிடிவி கேமராவில் கொள்ளையர்கள் தப்பிச்செல்லும் காட்சிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய தினேஷ், ஜஸ்டீன் மற்றும் கார்த்திக் ஆகிய 3 பேர் கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த போது பிடிபட்டனர். அவர்களிடம் நடத்தி விசாரணையில் மதுரையில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வீரக்குமார், கொள்ளை சம்பவத்திற்கு மூலையாக இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து உடற்கல்வி ஆசிரியர் வீரக்குமார், தினேஷ் மற்றும் ஜஸ்டீனை தெப்பக்குளம் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 46 சவரன் தங்க செயின்கள் மற்றும் 30 லட்சம் ரூபாயையும் பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 3 பேரையும், ஜுலை 12 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com