அரசு ஊழியர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில் மதுரை மாவட்ட ஆட்சியர் வீர ராகவராவ் ஓட்டப் பந்தயத்தில் கலந்துகொண்டார்.
மதுரை மாவட்ட அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டிகள் மதுரை எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் அரசின் பல்வேறு துறைகளில் இருந்து 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அரசு ஊழியர்கள் விளையாட்டு போட்டிகளில் அதிகம் பங்கேற்று உடல் நலத்தை பேண வேண்டும் என வலியிறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ் ராவ் சிறப்பு போட்டியாக நடைபெற்ற 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் கலந்து கொண்டார் ஓடினார். பின்னர் வெற்றி பெற்றபவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை அவர் வழங்கினார்.