பேருந்தை மறித்து இளைஞர் வெட்டிபடுகொலை

பேருந்தை மறித்து இளைஞர் வெட்டிபடுகொலை
பேருந்தை மறித்து இளைஞர் வெட்டிபடுகொலை

மதுரை வாடிபட்டி அருகே அரசுப்பேருந்தை வழிமறித்து இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 

வத்தலகுண்டிலிருந்து மதுரையை நோக்கி அரசுப்பேருந்து வந்துக்கொண்டிருந்தது. கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் பேருந்தை பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல் தனிச்சயம் என்ற இடத்தில் மறித்தது. பேருந்தை ஓட்டுநர் நிறுத்தியதும் வேகமாக  ஏறிய அக்கும்பல் பேருந்தில் பயணித்த அம்ரேஷ் என்ற இளைஞரை அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டியது.‌ ரத்த வெள்ளத்தில் சரிந்த அம்ரேஷ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். வாடிபட்டி காவல்துறையினர் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஓடும் பேருந்தில் இளைஞர் படுகொலை செய்யப்பட்டது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com