மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: வாடிவாசல் அமைக்கும் பணி தீவிரம்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: வாடிவாசல் அமைக்கும் பணி தீவிரம்
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி: வாடிவாசல் அமைக்கும் பணி தீவிரம்

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக வாடிவாசல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, அவனியாபுரத்தில் தை முதல்நாளன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இந்தாண்டு நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்காக அவனியாபுரம் திருப்பரங்குன்றம் சாலையில், பந்தக்கால் நடப்பட்டது. இதைத்தொடர்ந்து வாடிவாசல் அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குகேற்கும் மாடுபிடி வீரர்களுக்கு, அவனியாபுரம் அரசு ஆரம்ப பள்ளியில் இன்னும் சில தினங்களில் மருத்துவப் பரிசோதனை நடைபெற உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுமா என்ற கேள்வி ரசிகர்கள் இடையே ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டுள்ளது கண்டு ஜல்லிக்கட்டு ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com