மதுரை: மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அண்ணாமலை

மதுரை: மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அண்ணாமலை
மதுரை: மருதுபாண்டியர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அண்ணாமலை

தெப்பக்குளம் அருகேயுள்ள மருதுபாண்டியர் சிலைக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது பிறந்த நாள் மற்றும் 60-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் பாஜக சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர். 

முன்னதாக மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது சகோதரர்கள் சிலைக்கு அண்ணாமலை மற்றும் மூத்த தலைவர் ஹெச்.ராஜா, ஆர்.கே.சு.ரேஷ் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com