மதுரை: வாடிவாசலில் காளையை அவிழ்த்துவிட்ட 8ம் வகுப்பு மாணவி

மதுரை: வாடிவாசலில் காளையை அவிழ்த்துவிட்ட 8ம் வகுப்பு மாணவி
மதுரை: வாடிவாசலில் காளையை அவிழ்த்துவிட்ட 8ம் வகுப்பு மாணவி

பாலமேட்டை சேர்ந்த 8ம் வகுப்பு பள்ளி மாணவி அன்னலட்சுமி பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில், தான் வளர்க்கும் பெரிய கருப்பன் என்ற காளையை வாடிவாசலில் அவிழ்த்து பார்வையாளர்களை கவர்ந்தார்.

உலகப் புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பாலமேட்டை சேர்ந்த அன்னலட்சுமி என்ற 8ம் வகுப்பு பள்ளி மாணவி தான் வளர்க்கும் காளையை வாடி வாசலில் வந்து அவிழ்த்து விடுவதற்காக அழைத்து வந்தார்.

பெரிய கருப்பன் என்ற தனது காளையை கடந்த 4 ஆண்டுகளாக வளர்த்து வரும் மாணவி அன்னலட்சுமி களத்தில் சீறிப்பாய உரிய பயிற்சிகளை வழங்கி அழைத்து வந்துள்ளதாக தெரிவித்தார். அதேபோல மாணவி அவிழ்த்து விட்டு காளை வாடிவாசலில் சீறிப்பாய்ந்து காளையர்கள் கையில் பிடிபடாமல் சென்று வெற்றி பெற்றது. 8ம் வகுப்பு பள்ளி மாணவியின் வீரம் மிகுந்த இந்த நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com