மதுரை: நண்பர்களுடன் வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு

மதுரை: நண்பர்களுடன் வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு
மதுரை: நண்பர்களுடன் வைகை ஆற்றில் குளிக்கச் சென்ற மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு

மதுரை வைகை ஆற்றில் நண்பர்களுடன் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர் நீரில் மூழ்கி பலியான சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மகப்பூபாளையத்தைச் சேர்ந்த ராஜாகான் என்பவரின் மகன்கள் அசார்தீன், சிக்கந்தர் ஆகிய இருவரும் ஆரப்பாளையம் மதுரை வைகை ஆற்றுப்பாலத்தின் கீழே இறங்கி குளித்துள்ளனர். அப்போது தண்ணீரின் வேகம் அதிகரித்து சிக்கந்தர் ஆற்று நீரில் அடித்துச்செல்லப்பட்டார். இதனால் பதற்றமடைந்த அசாருதீன் அங்கு இருந்த பொதுமக்களிடம் கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

இதையடுத்து, கரிமேடு காவல் நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிறுவனை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்னர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீவிர தேடும் பணியில் ஈடுபட்டு சிறுவன் சிக்கந்தர் உடலை மீட்டனர்.

இதைத் தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சகோதரன் கண்முன்னே சிறுவன் நீரில் முழ்கி பலியான சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com