மதுரை: ஒப்பந்த பணி வழங்குவதாக பண மோசடி- அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது புகார்

மதுரை: ஒப்பந்த பணி வழங்குவதாக பண மோசடி- அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது புகார்
மதுரை: ஒப்பந்த பணி வழங்குவதாக பண மோசடி- அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது புகார்

ஒப்பந்த பணி வழங்குவதாகக்கூறி பண மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ மீது மாவட்ட காவல் கண்காணிப்பாளார் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதிக்கு உட்பட்ட திருமாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்த சுப்ரமணி என்பவர் அரசு ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு திருமாணிக்கம் கிராமத்தில் ரூ. 75 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கான ஒப்பந்த பணியை பெற்றுத் தருவதற்காக, அப்போதைய உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினரான நீதிபதியிடம் சுப்ரமணி 8.5 லட்சம் ரூபாய் வழங்கியதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து சமுதாயக் கூடத்திற்கான ஒப்பந்த பணிகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஒப்பந்ததாரரான சுப்ரமணி தான் கொடுத்த பணத்தை திரும்ப அளிக்குமாறு முன்னாள் எம்.எல்.ஏ நீதிபதியிடம் நேரில் முறையிட்டுள்ளார். அதற்கு பணத்தை திரும்பத் தரமுடியாது எனக் கூறியதோடு பணம் கேட்டு வந்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுப்பதாக பாதிக்கப்பட்ட சுப்ரமணி இன்று மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com