மதுரை: மதுவுக்கு அடிமையாகி தீக்குளித்த மகன் - காப்பாற்ற சென்ற தாயும் உயிரிழந்த சோகம்

மதுரை: மதுவுக்கு அடிமையாகி தீக்குளித்த மகன் - காப்பாற்ற சென்ற தாயும் உயிரிழந்த சோகம்
மதுரை: மதுவுக்கு அடிமையாகி தீக்குளித்த மகன் - காப்பாற்ற சென்ற தாயும் உயிரிழந்த சோகம்

மதுரை அனுப்பானடி பகுதியில் மதுப்பழக்கத்துக்கு அடிமையான ஒருவர் தீக்குளித்து இறந்திருக்கிறார். அவர் தீக்குளிக்க முயன்றபோது அவரை காப்பாற்ற முயன்ற அவர் தாயும் உயிரிழந்து மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளார்.

மதுரை அனுப்பானடி டீச்சர்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்தவர், செல்வ ஈஸ்வரி. கூலித்தொழிலாளியான செல்வ ஈஸ்வரி, சமீபத்தில் தனது மகனான சக்கரவர்த்திக்கு சமீபத்தில் திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணமான பின், சில மாதங்களாக எந்த வேலைக்கும் செல்லாமல் இருந்திருக்கிறார் சக்கரவர்த்தி. வேலைக்கு செல்லாதது மட்டுமன்றி, தினந்தோறும் மது அருந்திவிட்டு தகராறு செய்து தொந்தரவும் அளித்துவந்திருக்கிறார் அவர். இதனால் ஆத்திரமடைந்த சக்கரவர்த்தியின் மனைவி, கணவஅவரை பிரிந்து வாழ்ந்திருக்கிறார்.

இருப்பினும் சக்கரவர்த்தி தொடர்ந்து தாய் செல்வ ஈஸ்வரியின் பணத்தை எடுத்து தினந்தோறும் மது அருந்தியதோடு எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலயே இருந்து வந்திருக்கிறார். ஒருகட்டத்தில் மதுபழக்கத்தை கைவிடவும், வேலைக்கு செல்லவும் தாய் செல்வ ஈஸ்வரி அறிவுறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தாய் செல்வ ஈஸ்வரி மகனை கடுமையாக திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சக்கரவர்த்தி, நேற்று முன்தினம் மதுபோதையில் தனது வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடல் முழுவதிலும் ஊற்றி தீயிட்டு கொண்டிருக்கிறார். அதைப்பார்த்த அவரது தாய், மகனை காப்பற்ற முயன்று தீயை அணைக்க மகனுக்கு அருகே சென்றிருக்கிறார். அப்போது எதிர்பாரா விதமாக இவரது உடலிலும் தீப்பரவி படுகாயமடைந்திருக்கிறார். இருவரின் அலறல் சத்தத்தையும் கேட்ட பக்கத்து வீட்டுக்காரர்கள், இருவரையும் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

70 சதவித தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இது குறித்து தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

மதுபோதைக்கு அடிமையானதால் மனைவியை பிரிந்ததோடு தவறான முடிவு எடுத்ததன் காரணமாக தன் உயிரோடு சேர்த்து தனது தாயின் உயிரையும் பறிக்க காரணமாக இருந்த சக்கரவர்த்தியின் செயல் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com