அதிமுக பொதுக்குழு செல்லும்; இபிஎஸ்-க்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அதிமுக பொதுக்குழு செல்லும்; இபிஎஸ்-க்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அதிமுக பொதுக்குழு செல்லும்; இபிஎஸ்-க்கு சாதகமாக சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
Published on

அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

கடந்த ஜூலை 11-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம், செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் சில தினங்களுக்கு முன் தீர்ப்பளித்திருந்தார். அந்தத் தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

அந்த தீர்ப்பின்படி, `தனி நீதிபதி உத்தரவு செல்லாது. ஜூலை 11-ம் தேதி நடந்த பொதுக்குழு செல்லும்’ என்று தீர்ப்பளித்துள்ளனர். இதன்மூலம் தற்போது இபிஎஸ்-க்கு சாதகமாக தீர்ப்பு வெளிவந்துள்ளது.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 25 ஆம்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தனி நீதிபதி தீர்ப்பில் பல தவறுகள் இருப்பதாக இபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது தனி நீதிபதி உத்தரவு காரணமாக கட்சி நடவடிக்கைகள் ஸ்தம்பித்து விட்டதாகவும் தெரிவித்தனர். 

இந்நிலையில் தற்போது இபிஎஸ்-க்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகியுள்ளது. மேற்கொண்டு ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்துக்கு செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com