சமையலர் தேர்வு ரத்து அறிவிப்பை செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை -உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

சமையலர் தேர்வு ரத்து அறிவிப்பை செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை -உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
சமையலர் தேர்வு ரத்து அறிவிப்பை செய்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை -உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் உண்டு உறைவிட விடுதி சமையலர் தேர்வு அறிவிப்பை ரத்து செய்த தேர்வுக்குழு தலைவரின் உத்தரவுக்குத் தடை விதித்துள்ளது சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் உண்டு உறைவிட விடுதியில் சமையலர் பணிக்கு தேர்வு எழுதிய நிலையில், பணி நியமன ஆணையை வழங்கக்கோரி வசந்த் உள்ளிட்ட பலர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்பாக விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில், "மொத்தம் 954 பணியிடங்களில் முதல்கட்டமாக 9 மாவட்டங்களில் 164 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டு அவர்கள் பணியில் சேர்ந்தனர்.  பின்னர் 4 மாவட்டங்களில் 140 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இன்னமும் பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை. 16 மாவட்டங்களில் தேர்வு முடிவு வெளியிடப்படவில்லை. இந்நிலையில் பணியில் சேர்ந்தவர்களில் பலருக்கு அனுபவ அறிவு குறைவாக உள்ளது என்றும், அவர்கள் சமைக்கும் உணவு சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் இல்லை என மாணவர்கள் தரப்பில் புகார் எழுந்தது. அதோடு ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் உண்டு உறைவிட விடுதியில் தூய்மை பணியாளர்களாக பணியாற்றுவோர் தங்களுக்கு சமையலர் பணியை வழங்கவும், அதுவரை சமையலர் பணிக்கு நபர்களை தேர்வு செய்ய தடை விதித்தும் உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் தற்போதைய நிலையே தொடர உத்தரவிட்டது. அதன் பின்னரும் தேர்வுப்பட்டியல் வெளியிடப்பட்டதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டது. இவற்றைக் கருத்தில்கொண்டு தேர்வுக் குழுவின் தலைவர் ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் உண்டு உறைவிட விடுதியில் சமையலர் பணிக்கான தேர்வு அறிவிப்பை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டார்" என தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நீதிபதி 2021 நவம்பர் 25 ஆம் தேதி பணியில் நியமனம் செய்யப்பட்டவர்களின் அனுபவ அறிவை பரிசோதிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் 27 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் அனுபவ அறிவு குறைந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வளவு விரைவாக எப்படி இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

ஆகவே முறையான காரணங்கள் ஏதுமின்றி தேர்வுக்குழு தலைவர் தேர்வு அறிவிப்பை ரத்து செய்த உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது. இதுபோன்று வழக்கு தொடர்வது மனுதாரர்களுக்கும், அரசுக்கும் தேவையற்ற பொருட் செலவையும், சிரமத்தை ஏற்படுத்தும். தேர்வு குழுவின் பணி உரிய நபர்களை தேர்வு செய்வதே. இந்நிகழ்வு தேர்வு குழுவின் பொறுப்பற்ற தன்மையை வெளிப்படுத்துவதாகவும், இரக்கமற்ற செயல் என்றும் நீதிமன்றம் கருதுகிறது. ஆகவே தமிழகத்தின் முதன்மை செயலர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் செயலர்கள் உண்டு, உறைவிட விடுதியின் சமையலர் பணி தேர்வுக்குழுவின் தேர்வுக்குழு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரைத்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிக்கலாம்: ''நிரந்தர ஆசிரியர்களையே நியமிக்கலாமே?”- அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை நீதிபதி கேள்வி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com