ஜெயில் திரைப்படம் வெளியாகுமா? - டிசம்பர் 9ம் தேதி தீர்ப்பு

ஜெயில் திரைப்படம் வெளியாகுமா? - டிசம்பர் 9ம் தேதி தீர்ப்பு
ஜெயில் திரைப்படம் வெளியாகுமா? - டிசம்பர் 9ம் தேதி தீர்ப்பு

இயக்குனர் வசந்தபாலனின் ஜெயில் திரைப்படத்தை வெளியிட தடைவிதிக்க கோரிய வழக்கின் தீர்ப்பை டிசம்பர் 9 ஆம் தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயில்' திரைப்படத்தை, க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார். இத்திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க கோரி ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. தங்களிடம் ஒப்பந்தம் போட்டுவிட்டு எஸ்.எஸ்.ஐ. என்ற நிறுவனத்திடம் படத்தின் வெளியீட்டு உரிமையை வழங்கியதாக மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துக்கு காப்புரிமை ஏதும் வழங்கவில்லை எனவும், படத்தை வெளியிட தகுதியான விநியோகஸ்தரை தங்களுக்கு அறிமுகப்படுத்துமாறு மட்டுமே கமிஷன் அடிப்படையில் ஒப்பந்தம் மேற்கொண்டதாக படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், ஜெயில் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய வழக்கின் மீதான தீர்ப்பை டிசம்பர் 9ஆம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com