3ம் பாலினத்தவருக்கு 3 மாதங்களில் தடுப்பூசி - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

3ம் பாலினத்தவருக்கு 3 மாதங்களில் தடுப்பூசி - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

3ம் பாலினத்தவருக்கு 3 மாதங்களில் தடுப்பூசி - தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Published on

மூன்றாம் பாலினத்தவர் அனைவருக்கும் மூன்று மாதங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்யும்படி தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தங்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக 4 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், கொரொனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி மூன்றாம் பாலினத்தவரான கிரேஸ் பானு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது ஆஜரான தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், மூன்றாம் பாலினத்தவருக்கு கொரோனா நிவாரண நிதியில் முதல் தவணையாக 2,000 ரூபாயை வழங்கி விட்டதாகவும் இரண்டாம் தவணை விரைவில் வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

இதையேற்ற நீதிபதிகள், மூன்றாம் பாலினத்தவருக்கு மூன்று மாதங்களில் தடுப்பூசி செலுத்துவதை உறுதிசெய்ய அரசிற்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com