சென்னையில் எத்தனை ரவுடி கும்பல்கள் உள்ளன? - உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னையில் எத்தனை ரவுடி கும்பல்கள் உள்ளன? - உயர்நீதிமன்றம் கேள்வி

சென்னையில் எத்தனை ரவுடி கும்பல்கள் உள்ளன? - உயர்நீதிமன்றம் கேள்வி
Published on

சென்னை உட்பட தமிழகத்தில் எத்தனை ரவுடி கும்பல் தீவிரமாக உள்ளது என்று தமிழக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

தன்னை குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்ததை எதிர்த்து வேலு என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் கிருபாகரன், பாஸ்கரன் அமர்வு முன்பு இன்று நடைபெற்றது. இந்த விசாரணையின் போது, ரவுடி கும்பலையும், கூலிப்படையினரையும் ஒழித்து விட்டால் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். 

மேலும், தமிழக காவல்துறைக்கு நீதிபதிகள் சரமாரியான கேள்விகளை முன் வைத்தனர். இதனையடுத்து, நவம்பர் 30 ஆம் தேதிக்குள் தமிழக டிஜிபி, மத்திய உள்துறை செயலாளர் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், தமிழக டிஜிபி-யையும், மத்திய உள்துறை செயலாளரையும் எதிர் மனுதாரர்களாக சேர்த்தனர். 

நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள்:-

  • தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் எத்தனை ரவுடி கும்பல் தீவிரமாக உள்ளது?
  • காவல்துறையினரின் பிடியில் இருந்து தப்பிப்பதற்காக ரவுடிகள் அரசியல் கட்சிகள் ஆரம்பிக்கின்றனரா?
  • அப்பாவிகளின் சொத்துக்களை அபகரிக்க, ரியல் எஸ்டேட் துறையினர் ரவுடி கும்பல்களை ஈடுபடுத்துகின்றனரா?
  • ரவுடிகள் வெளி மாநிலங்களில் உள்ள சட்ட கல்லூரிகளில் இருந்து சட்ட பட்டங்களை வாங்குகிறார்களா?
  • காவல்துறை உயர் அதிகாரிகள் ரவுடிகளுக்கு ஆதரவாக செயல்படுகிறார்களா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com