சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி சிவஞானம் இடம் மாற்றத்தையும், மேகலாயாவிற்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜியை இடமாற்றம் செய்யும் பரிந்துரையையும் மறுபரிசீலனை செய்யக் கோரி தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டுமென மூத்த வழக்கறிஞர் வி.ரங்கபாஷ்யம் தலைமையிலான 4 பேர் கொண்ட எம்.பி.ஏ.-வின் இடைக்கால நிர்வாக குழுவிற்கு கடிதம் கொடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இன்று காணொலி காட்சி மூலம் மெட்ராஸ் பார் அசோசியேசன் அவசர பொதுக்குழு கூட்டப்பட்டது. அதில் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பி.எஸ்.ராமன், என்.ஜி.ஆர்.பிரசாத், வி.பிரகாஷ், பார்த்தசாரதி, ஜி.கார்த்திகேயன், ஆதிலட்சுமி லோகமூர்த்தி, ஷான் கட்டாரி வி.ஆர்.கமலநாதன் உள்ளிட்ட 92 பேர் கலந்து கொண்டனர்.