வருவாய் துறையில் பணியாற்றி வந்த தனது கணவர், 1988ம் ஆண்டு சாலை விபத்தில் பலியானதாக கூறி, கருணை அடிப்படையில் தனக்கு அரசு வேலை வழங்க கோரி, ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ரோசா என்பவர் அரசுக்கு விண்ணப்பித்தார். அதே நேரத்தில் மற்றொரு பெண், அரசு ஊழியரின் மனைவி என கூறி கருணை அடிப்படையில் வேலை வழங்க கோரியதால், சட்டப்பூர்வ மனைவி யார் என நீதிமன்றத்தில் உத்தரவு பெற்று வர அரசு அறிவுறுத்தியது.