\
மதுசூதனன் வெற்றி பெறுவார்: குலதெய்வத்தைக் கும்பிட்ட ஓபிஎஸ் நம்பிக்கை

மதுசூதனன் வெற்றி பெறுவார்: குலதெய்வத்தைக் கும்பிட்ட ஓபிஎஸ் நம்பிக்கை

மதுசூதனன் வெற்றி பெறுவார்: குலதெய்வத்தைக் கும்பிட்ட ஓபிஎஸ் நம்பிக்கை
Published on

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் மதுசூதனன் வெற்றி பெறுவார் என ஒ.பன்னீர்செல்வம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள தமது குல தெய்வமான பேச்சியம்மன் கோவிலிலுக்கு சென்று பன்னீர்செல்வம் வழிபாடு செய்தார். அதற்கு முன்னதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள்கோயிலுக்கு தமது மனைவியுடன் சென்று சாமிதரிசனம் செய்தார். ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் குறித்து பன்னீர்செல்வத்திடம் கேள்வி எழுப்பியபோது, இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு மதுசூதனன் வெற்றி பெறுவார் என நம்பிக்கை தெரிவித்‌தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com