தமிழ்நாடு
தமிழச் சங்க உட்கட்டமைப்பு வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
தமிழச் சங்க உட்கட்டமைப்பு வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
மதுரை தமிழ்ச் சங்கத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மேலூரை அடுத்த எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஸ்டாலின், மதுரை தமிழ்ச் சங்கத்தில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தக் கோரி தொடர்ந்த வழக்கு விசாரணையின் போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சுந்தரேசன், சதீஷ்குமார் ஆகியோர் தமிழக அரசின் முதன்மைச் செயலாளர், தமிழ் வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் உள்ளிட்டோர் 4 வாரத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.