"10 ஆண்டுகளாக பணி நியமனம், நிரந்தரம் செய்யவில்லை" - மா.சுப்ரமணியன் குற்றச்சாட்டு

"10 ஆண்டுகளாக பணி நியமனம், நிரந்தரம் செய்யவில்லை" - மா.சுப்ரமணியன் குற்றச்சாட்டு

"10 ஆண்டுகளாக பணி நியமனம், நிரந்தரம் செய்யவில்லை" - மா.சுப்ரமணியன் குற்றச்சாட்டு
Published on

தமிழக மருத்துவத் துறையில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தரம், பணி நியமனம் செய்யாமல், ஒப்பந்த அடிப்படையிலேயே 30 ஆயிரம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றச்சாட்டியுள்ளார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனையில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்ட பிராணவாயு இயந்திரம் மற்றும் இரண்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தொடங்கி வைத்தார். பின்னர் பொள்ளாச்சி அருகே உள்ள தமிழக கேரள எல்லைப் பகுதியான மீனாட்சிபுரம் பகுதி சோதனைச் சாவடிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர், கடந்த பத்தாண்டுகளாக யாருக்கும் பணி நியமனம், பணி நிரந்தரம் செய்யாமல் ஒப்பந்த அடிப்படையில் 30 ஆயிரம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும், இந்த பணியிடங்களை வரைமுறைப்படுத்த விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com