பிறந்த நாள் கேக் வெட்ட வராத காதலன்?: தூக்கிட்டு தற்கொலை செய்த பெண் காவலர்..!

பிறந்த நாள் கேக் வெட்ட வராத காதலன்?: தூக்கிட்டு தற்கொலை செய்த பெண் காவலர்..!
பிறந்த நாள் கேக் வெட்ட வராத காதலன்?: தூக்கிட்டு தற்கொலை செய்த பெண் காவலர்..!

சென்னையில் காதலன் பிறந்த நாள் கேக் வெட்ட வராததால்  பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.



சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்தவர் சரண்யா (21). ரயில்வே பெண் காவலராக பணிபுரிந்து வந்தார். தற்போது கொரோனா தடுப்பு பணிக்காக எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் தமிழ்நாடு சிறப்பு காவல்படையைச் சேர்ந்த ஏழுமலை என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.


நேற்று ஏழுமலைக்கு பிறந்தநாள் என்பதால் கேக் வாங்கி வைத்துக் கொண்டு சரண்யா அயனாவரத்தில் வீடு அருகே காத்திருந்துள்ளார். ஆனால் ஏழுமலை வரவில்லை எனச் சொல்லப்படுகிறது. இதனையடுத்து, சரண்யா ஏழுமலையை போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மன உளைச்சலுக்கு உள்ளான சரண்யா வீட்டில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டேரி போலீசார் சரண்யாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com