திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லாரி..!

திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லாரி..!

திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த லாரி..!
Published on

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் தென்னை நார் ஏற்றி சென்ற லாரி நடு ரோட்டில் தீப்பிடித்து எரிந்ததால், லாரியில் இருந்த தென்னை நார்கள் முற்றிலும் எரிந்து நாசமாகின.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் குமார் என்பவர் தென்னை நாரிலிருந்து கயிறு தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இவருடைய தொழிற்சாலைக்கு, இன்று கல்லாலங்குடி அருகே வெயிலில் காய வைக்கப்பட்டிருந்த தென்னை நார்களை லாரியில் ஏற்றிக்கொண்டு சந்தைப்பேட்டை கொண்டு சென்றனர். லாரி ஆலங்குடி வடகாடு முகத்தை கடந்து சென்றபோது மேலே சென்ற மின்கம்பி உரசியதில் தென்னை நார்கள் தீப்பிடித்து எரிய தொடங்கியது. 

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் கூச்சலிட்டதையடுத்து ஓட்டுநர் நடு ரோட்டில் லாரியை நிறுத்திவிட்டு பொதுமக்களுடன் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டார். ஆனால் தீ மளமளவென கொழுந்துவிட்டு எரியவே தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைப்பதற்குள் லாரியில் இருந்த தென்னை நார்கள் முழுமையாக எரிந்து நாசமானது. லாரியும் பெருமளவில் சேதம் அடைந்தது. 

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள ஆலங்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் தீ விபத்தில் 4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com