காட்டாற்று வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தில் தொங்கி நிற்கும் லாரி

காட்டாற்று வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தில் தொங்கி நிற்கும் லாரி

காட்டாற்று வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தில் தொங்கி நிற்கும் லாரி
Published on

தூத்துக்குடியில் காட்டாற்று வெள்ளத்தால் சேதமடைந்த பாலத்தில் லாரி ஒன்று தொங்கிய நிலையில் உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காட்டாற்று வெள்ளத்தால் பாலம் உடைந்து, அதில் சென்ற லாரி நடுவில் தொங்கி நிற்கிறது. கழுகுமலை அருகே பெய்த மழை காரணமாக, ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தினால் கோவில்பட்டி- கழுகுமலை இடையிலான பாலம் சேதமடைந்தது. அப்போது அவ்வழியாகச் சென்ற லாரி நடுவில் மாட்டிக் கொண்டுள்ளது. அதனால், கோவில்பட்டியிலிருந்து கழுகுமலை, சங்கரன்கோவில், தென்காசி பகுதிக்குச் செல்ல போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com